

பங்குச்சந்தையின் நீண்டகால வளர்ச்சி என்பது முதலீட்டாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதை பி.எஸ்.இ சென்செக்ஸ் நிரூபித்துள்ளது. உதாரணமாக, 1979-ம் ஆண்டில் சென்செக்ஸில் முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சம், 2026 பிப்ரவரி நிலவரப்படி சுமார் ரூ.8.13 கோடியாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், சாதாரண முதலீட்டாளர்களுக்கு எழும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், எந்த வகையான பங்குகளில் முதலீடு செய்வது என்பதுதான். லார்ஜ்-கேப், மிட்-கேப் அல்லது ஸ்மால்-கேப்பா அல்லது இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் முதலீட்டாளர்கள் பலருக்கும் குழப்பம் வருவது இயல்பான ஒன்றாக உள்ளது.
சந்தை பிரிவுகளும் தன்மைகளும்
பங்குச்சந்தையில் ஒவ்வொரு பிரிவும் ஒரு தனித்துவமான இயல்பைக் கொண்டது.
லார்ஜ்-கேப்: இவை பெரிய நிறுவனங்கள், முதலீட்டிற்கு அதிக நிலைத்தன்மையை வழங்குகின்றன.
மிட்-கேப்: இவை வளர்ந்து வரும் நிறுவனங்கள், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு இடையே ஒரு சமநிலையைத் தருகின்றன.