

நாட்டின் பொருளாதார வலிமையையும், மக்களின் வாழ்வாதார முன்னேற் றத்தையும் துல்லியமாக அளவிடும் ஒரு `மதிப்பெண் அட்டையாக' மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விளங்குகிறது. இந்தியப் புள்ளியியல் அமைச்சகம் இக்கணக்கீட்டுக்கான அடிப்படை ஆண்டை 2022-23 ஆக மாற்றியுள்ளது.
கரோனா தொற்று பாதிப்புக்குப் பிந்தைய ஒரு சீரான நிதியாண்டாக இது கருதப்படுவதால், வளர்ச்சியைக் கணக்கிடுவதற்கான நிலையான `அங்கீகார ஆண்டாக' (Base Year) இது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டின் விலைகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் என்பதால், ஒரு குறிப்பிட்ட ஆண்டின் விலையைத் தரமாக வைத்தே நாட்டின் உண்மையான வளர்ச்சி கணக்கிடப்படுகிறது.