

கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்கா, ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்து வருகின்றன. இந்த ஆண்டில் இதுவரை நிப்டி குறியீடு சுமார் 15% சரிந்துள்ளது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பதே இதற்கு முக்கிய காரணம்.
அதேநேரம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். பங்கு விலைகள் கணிசமாக குறைந்துள்ளதால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றன.