ஏஐ உச்சி மாநாடு: இந்தியாவின் தொழில்நுட்ப பாய்ச்சல்

ஏஐ உச்சி மாநாடு: இந்தியாவின் தொழில்நுட்ப பாய்ச்சல்
Updated on
3 min read

நான்காம் தொழில் புரட்சியின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தகவல் தொழில்நுட்ப உலகை புரட்டிப்போடத் தொடங்கி உள்ளது. மனித மூளைக்கு சவால் விடும் வகையில் உருவெடுத்துள்ள இது, மனிதர்களின் வேலைவாய்ப்பை பெருமளவில் பறித்துவிடும் என்று பலர் அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், ஏஐ என்பது வெறும் அறிவியல் புனைவு அல்ல, அது எதிர்கால உலகை ஆளப்போகும் ஒரு பெரும் சக்தி என்பதை நிரூபிக்கும் வகையில், 'இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாடு' டெல்லியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

உலகின் 118 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 20-க்கும் மேற்பட்ட அரசுத் தலைவர்கள் மற்றும் கூகுள், ஓபன் ஏஐ போன்ற முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

‘அனைவருக்கும் பயன், அனைவருக்கும் மகிழ்ச்சி' (Sarvajana Hitaya, Sarvajana Sukhaya) என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற இந்த மாநாடு, இந்தியாவை உலகளாவிய ஏஐ வரைபடத்தில் ஒரு முக்கிய சக்தியாக நிலைநிறுத்தி உள்ளது.

இதுவரை ஏஐ தொடர்பான மாநாடுகள் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளிலேயே நடைபெற்றன. ஆனால், முதன்முறையாக 'குளோபல் சவுத்' எனப்படும் வளரும் நாடுகளின் சார்பாக இந்தியா இந்த மாநாட்டை நடத்தி உள்ளது.

இதன் மூலம், ஏஐ தொழில்நுட்பம் என்பது சில நாடுகளின் ஏகபோக உரிமை அல்ல, அது சாமானிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற செய்தியை இந்தியா உலகுக்கு உரக்கச் சொன்னது.

உச்சி மாநாட்டின் முக்கிய தூண்கள்:

இந்த மாநாடு மூன்று முக்கிய சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது:

* மக்கள்: மனிதவள மேம்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.

* பூமி: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பம்.

* முன்னேற்றம்: பொருளாதார வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in