

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, நிறுவனங்கள் குறித்த ஆராய்ச்சி, பங்குகளைத் தேர்வு செய்தல், துறைவாரியான ஒதுக்கீடு மற்றும் போர்ட்ஃபோலியோவை அவ்வப்போது மாற்றியமைத்தல் போன்ற சிரமங்கள் இன்றி எளிதான வழியை பரஸ்பர நிதி எனும் மியூச்சுவல் பண்டுகள் வழங்குகின்றன.
இருப்பினும், தற்போது இந்தியாவில் நூற்றுக்கணக்கான மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதால், எந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்பதில் முதலீட்டாளர்களுக்குப் பெரும் குழப்பமும், தயக்கமும் உள்ளது.
பங்குகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் நிர்வகிப்பது போன்ற பணிகளை நிதி மேலாளர்கள் கவனித்துக் கொண்டாலும், எந்த வகையான சந்தை மூலதனத்தில் முதலீடு செய்வது என்பதை முதலீட்டாளர்களே தீர்மானிக்க வேண்டியுள்ளது.