திடீர் நிதி சிக்கல்களை சமாளிக்க பொருளாதார நிலைத்தன்மை நிதியம்

திடீர் நிதி சிக்கல்களை சமாளிக்க பொருளாதார நிலைத்தன்மை நிதியம்

Published on

அணு ஆயுதத்தை உற்​பத்தி செய்​வ​தாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் போர் தொடுத்​தன. இது மேற்கு ஆசியா முழு​வதும் பரவி உள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் மற்​றும் எரி​வாயு போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது. இதனால் உலகம் முழு​வதும் எரிபொருள் தட்​டுப்​பாடு ஏற்​பட்டு அதன் விலை​யும் வேக​மாக உயர்ந்து வரு​கிறது.

இந்​நிலை​யில், ‘பொருளா​தார நிலைப்​படுத்​தல் நிதி​யத்​தை’ (Economic Stabilisation Fund) மத்​திய அரசு அறி​முகப்​படுத்தி உள்​ளது. கச்சா எண்​ணெய் விலை​யில் ஏற்​படும் ஏற்ற இறக்​கங்​கள் மற்​றும் மேற்கு ஆசிய பிராந்​தி​யத்​தில் நில​வும் புவி​சார் அரசி​யல் அபா​யங்​களி​லிருந்து நாட்​டின் பொருளா​தா​ரத்​தைப் பாது​காப்​பது​தான் இதன் நோக்​கம்.

இஎஸ்​எப் (ESF) என்​பது மத்​திய அரசால் உரு​வாக்​கப்​பட​வுள்ள ஒரு சிறப்பு சேமிப்பு நிதி​யாகும். உலகளா​விய நெருக்​கடிகள், விநி​யோக தடைகள், அல்​லது திடீர் விலை உயர்வு போன்ற எதிர்​பா​ராத பொருளா​தார அதிர்​வு​களை சமாளிக்க இது ஒரு நிதி பாது​காப்பு வளை​ய​மாக (Financial Buffer) செயல்​படும்.

* இந்த நிதி​யின் மொத்த அளவு ரூ.1 லட்​சம் கோடி.

* ஆரம்​பத்​தில் ரூ.57,000 கோடி கூடு​தல் பட்​ஜெட்​டின் மூலம் ஒதுக்​கப்​படும்.

* மீத​முள்ள தொகை அமைச்​சகங்​களின் சேமிப்பு மற்​றும் மறு​வழங்​கல்​களால் திரட்​டப்​படும்.

* இந்த நிதியை நிதி அமைச்​சகத்​தின் பொருளா​தார விவ​காரத் துறை (DEA) நிர்​வகிக்​கும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in