

அமெரிக்காவில் பல லட்சம் சம்பளத்தில் பார்த்து வந்த ஐடி வேலையை உதறிவிட்டு, இந்தியாவில் இயற்கை விவசாயத்தில் களம் இறங்கி ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் ஈட்டி மென்பொறியாளர் சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர் சசி குமார், இவர் விப்ரோ’ நிறுவனத்தில் 12 ஆண்டுகள் பணியாற்றினார். தொழில்முறையாக அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றிய அவர், விவசாயத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தனது கார்ப்பரேட் வேலையைத் துறந்து இந்தியா திரும்பினார்.
பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது தந்தை, தான் பட்ட கஷ்டங்களை மகன் படக் கூடாது என்ற நோக்கில் சசி குமாரின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.