Published : 12 Dec 2022 06:36 AM
Last Updated : 12 Dec 2022 06:36 AM

ப்ரீமியம்
நிரந்தர வைப்புக்கு வரி விலக்கு... வங்கிகளின் விருப்பம் நிறைவேறுமா?

முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் வங்கிகளுக்கு, பரஸ்பர நிதியங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகின்றன. இதை உணர்ந்த வங்கிகள், ரூ.5 லட்சம் வரையிலான நிரந்தர வைப்பு (Fixed Deposit) திட்டங்களுக்கு 2023-24 பட்ஜெட்டில் வரி விலக்கு அளிக்கக் கோரி மத்திய நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளன. பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது சிறிய அளவிலான முதலீடுகளுக்கு வங்கியின் நிரந்தர வைப்புத் (எப்.டி.) திட்டங்களே மாற்றாக அமைந்துள்ளன. இவை நிரந்தர வருமானத்தை வழங்குவதால் மிகவும் பாதுகாப்பானதும்கூட.

இருப்பினும், எப்.டி. மீதான வரி விதிப்பு என்பது பாதகமான அம்சமாகவே இருக்கிறது. வருமான வரிச் சட்டத்தின்படி, எப்.டி.மீதான வட்டி ‘பிற ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம்’ என்று குறிப்பிடப்பட்டு முழுமையாக வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறது. உதாரணமாக, எப்.டி.க்கான வட்டி 6% ஆக இருந்தால், முதலீட்டாளர்கள் 30% வரி அடுக்கில் வரும்பட்சத்தில், வரிக்குப் பிந்தைய வட்டியானது 4.2% ஆகக் குறைந்து விடுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x