Published : 30 May 2016 05:46 PM
Last Updated : 30 May 2016 05:46 PM

இந்திய தொலைத் தொடர்புத் துறை 5.0

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போதுதான் தொலைத் தொடர்பு துறை மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்தது என்று சொல்லலாம். அஞ்சல், டெலிகிராப் என தகவல் பரிமாற்றத்திற்குத் தேவையான துறைகளில் பிரிட்டிஷார் கவனம் செலுத்தினர். அதில் பல்வேறு புதுமைகளையும் கொண்டு வந்தனர். அப்படி வளர்ந்த இந்திய தொலைத் தொடர்புத் துறை இன்று சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு துறையாக வளர்ந்து நிற்கிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் சிறு கிராமங்களுக்கு கூட இன்று இணையதள வசதியும் மொபைல்போன் வசதியும் சென்றடைந்திருக்கிறது.

தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சியை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொண்டது என்றே சொல்லலாம். 2ஜி, 3ஜி, 4ஜி என்று அடுத்தடுத்த தொழில்நுட்பத்தை கடந்து நாம் சென்று கொண்டிருக்கிறோம். மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதற்கு மத்திய அரசும் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருவது வரவேற்கப்படவேண்டியது.

# 1851 - கொல்கத்தாவுக்கும் டைமண்ட் துறைமுகத்துக்கும் இடையே முதன் முதலில் மின்னணு டெலிகிராப் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

# 1853 - சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் டெலிபோன் எக்சேஞ்ச் திறக்கப்பட்டன.

# 1882 - 6,400 கிலோ மீட்டர் அளவுக்கு டெலிகிராப் இணைப்புகள் போடப்பட்டன.

# கொல்கத்தாவில் ஆரம்ப காலத்தில் 93 சந்தாதாரர்கள் மட்டுமே இருந்தனர்.

# உலகம் முழுவதும் 658 கோடி தொலைத் தொடர்பு சந்தாதாரர்கள் உள்ளனர்.

# மொத்த சந்தாதாரர்களில் 13 சதவீதம் பேர் இந்தியர்கள். அதாவது இந்தியாவில் உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை 86.30 கோடி.

# இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 6.1 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது.

# நேரடியாக 22 லட்சம் வேலைவாய்ப்புகளையும் மறைமுகமாக 20 லட்சம் வேலைவாய்ப்புகளையும் அளித்து வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 2.54 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

# உலகிலேயே தொலைபேசி கட்டணம் இந்தியாவில்தான் குறைவானது.

# சர்வதேச அளவில் இன்டர்நெட் வசதியை பயன்படுத்துவதில் இந்தியாவின் இடம் 3.

# 2016-ம் ஆண்டு ஜனவரி மாத தகவலின் படி இந்தியாவில் மொத்தம் உள்ள இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 46.2 கோடி.

# கடந்த 10 வருடங்களாக மிக அதிகமாக அந்நிய நேரடி முதலீடு வரும் துறையாக இந்திய தொலைத் தொடர்பு துறை உள்ளது.

# உலக அளவில் தொலைபேசி மற்றும் செல்போன்கள் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

# அடுத்த ஐந்து ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

# 2020-ம் ஆண்டுக்குள் 127 கோடி சந்தாதாரர்களை இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

# 2013-14 ஆண்டு தகவலின்படி இந்த துறையின் மொத்த வருமானம் 4.29 லட்சம் கோடி ரூபாய்.

# 2014-15ம் ஆண்டு நிலவரப்படி இந்தத் துறையின் மதிப்பு ரூ. 1,34,000 கோடிக்கும் மேல் உள்ளது.

# இந்தியாவில் முதல் மொபைல் டெலிபோன் சேவை 1995-ம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்டது.

# இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை 5,00,000 கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளது.

# 2014-ம் ஆண்டு தகவலின் படி இந்திய இ-காமர்ஸ் துறையின் மதிப்பு ரூ.1,47,499 கோடி

# 6.5 கோடி மக்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்குகின்றனர்.

# 2016-ம் ஆண்டு இரண்டாவது காலாண்டு படி இந்த துறையின் மொத்த வருமானம் ரூ.47,374 கோடி

# இந்தியாவில் உள்ள செல்போன் கோபுரங்களின் மொத்த எண்ணிக்கை 2.1 லட்சத்துக்கு அதிகம்.

# இந்த துறைக்கு கடந்த ஆண்டு வந்த அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு ரூ.19,443 கோடி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x