Published : 13 Jun 2022 07:45 AM
Last Updated : 13 Jun 2022 07:45 AM
பொதுவாக, முதலீடுகளை மேற்கொள்வோர் குறைந்த விலையில் அதிகரிக்க வாய்ப்புள்ள நிறுவன பங்குகளை எதிர்நோக்குவது இயல்பு. அதிலும் குறிப்பாக பங்குச் சந்தை முதலீடுகளைப் பொறுத்தமட்டில் மிகுந்த எச்சரிக்கையோடு மதிப்பு குறைவாக உள்ள நிறுவனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் அவற்றின் உண்மையான மதிப்பைவிட குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கும்.
ஒரு நிறுவனத்தின் பங்குகள் அந்நிறுவன மதிப்பைவிட குறைவாக மதிப்பிடப்படுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அது மிகவும் பிரபலமில்லாத நிறுவனமாக இருக்கலாம், மிகச் சிறப்பாக அந்நிறுவனம் செயலாற்றினாலும் அது கவனிக்கப்படாமலிருக்கலாம். அல்லது குறிப்பிட்ட முதலீட்டாளர்கள் மட்டுமே அதைக் கவனித்திருக்கலாம். இவை தவிர நிறுவனத்தின் பங்குகள் சரிவதற்கு வெளிக் காரணிகளும் காரணமாக அமைவதுண்டு. அல்லது பங்குச் சந்தையில் ஏற்படும் மிகப் பெரும் சரிவு காரணமாகவும் பங்கு விலை சரிவைச் சந்திக்கக்கூடும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT