Published : 30 May 2022 08:00 AM
Last Updated : 30 May 2022 08:00 AM

ப்ரீமியம்
எஸ்பிஐ தமிழகத்துக்கு எவ்வளவு கடன் வழங்குகிறது? - தலைமைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணா பேட்டி

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கின்றன. இந்தக் கிளைகள் தனித்தனி வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் டெல்லி, மும்பை, அகமதாபாத் என 17 வட்டங்கள் இருக்கின்றன. இதில் சென்னை வட்டத்தின் தலைமைப் பொது மேலாளராக பணி புரிபவர் ராதாகிருஷ்ணா. சென்னை வட்டம் என்பது தமிழ்நாட்டையும் பாண்டிச்சேரியையும் உள்ளடக்கியது. மொத்தம் 1,200-க்கு மேற்பட்ட வங்கிக் கிளைகள் சென்னை வட்டத்தின் கீழ் உள்ளன.

இந்த வங்கிகள் அனைத்தும் ராதாகிருஷ்ணாவின் தலைமையின் கீழ்தான் செயல்படுகின்றன. எஸ்பிஐயின் சென்ற நிதி ஆண்டின் நான்காம் காலாண்டு அறிக்கை சமீபத்தில் வெளியானது. ஒட்டுமொத்த அளவில் சென்ற நிதி ஆண்டில் அதன் நிகர லாபம் 55 சதவீதம் உயர்ந்து ரூ.31,676 கோடியாக உள்ளது. சென்னை வட்டத்தின் நிகர லாபம் 14 சதவீதம் அதிகரித்து ரூ.730 கோடியாக உள்ளது. இந்தத் தருணத்தில் சென்னை வட்டத்தில் எஸ்பிஐயின் செயல்பாடுகள் குறித்தும், அதன் கடன் நிலவரம் குறித்தும், அதன் திட்டங்கள் குறித்தும் ராதாகிருஷ்ணாவிடம் விரிவாக உரையாடியதிலிருந்து…

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x