Published : 23 May 2022 10:10 AM
Last Updated : 23 May 2022 10:10 AM

ப்ரீமியம்
கடன் புதைகுழி: இலங்கையை பின்தொடரும் நாடுகள்

சுப.மீனாட்சி சுந்தரம்

இலங்கை எத்தகையதொரு பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை; எரிபொருள் கிடைக்கவில்லை. நாடே ஸ்ம்பித்தது; மக்கள் போராட்டம் வெடித்திருக்கிறது. தற்போது கூடுதல் கவலையளிக்கக்கூடிய விசயம் என்னவென்றால், இலங்கையைப் போலவே பல நாடுகள் கடும் கடன் சுமையால் தீவிர பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பாக உலக நாடுகளின் கடன் நிலவரம் தொடர்பான அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டது. 70 நாடுகள் அதன் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளன என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் அந்நாடுகள் மிகப் பெரும் சரிவை எதிர்கொள்ளும் என்றும் உலக வங்கி எச்சரித்திருந்தது. மார்ச் மாதம் ஐநா வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக 107 நாடுகள் கடும் நெருக்கடியை சந்திக்க உள்ளது என்றும் இவற்றில் 69 நாடுகள் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, கடும் நிதி நெருக்கடி ஆகிய மூன்று காரணிகளால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் குறிப்பிட்டிருந்தது.இந்த 69 நாடுகளில் 25 நாடுகள் ஆப்பிரிக்காவையும், 25 நாடுகள் ஆசியா பசிபிக்கையும், 19 நாடுகள் லத்தீன் அமெரிக்காவையும் சேர்ந்தவை ஆகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x