Published : 15 Jul 2019 08:14 AM
Last Updated : 15 Jul 2019 08:14 AM

வெற்றி மொழி: ஜார்ஜ் ஆர்வெல்

1903-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஜார்ஜ் ஆர்வெல் ஆங்கில நாவலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் மற்றும் விமர்சகர் ஆவார். தனது கட்டுரைகள், மதிப்புரைகள், கவிதைகள், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் பத்திகள் போன்றவற்றுக்காக பெரிதும் அறியப்படுகிறார்.

“அனிமல் ஃபார்ம்” மற்றும் “1984” ஆகியன இவரது மகத்தான படைப்புகளாகும். இவருடைய படைப்புகள் தெளிவான உரைநடை, மொழி ஆளுமை, சமூக அநீதி குறித்த விழிப்புணர்வு, சர்வாதிகாரத்துக்கான எதிர்ப்பு நிலைப்பாடு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. இன்றும் ஆங்கில இலக்கியம், பண்பாடு, மொழி ஆகியவற்றில் இவரது ஆக்கங்களின் தாக்கம் உணரப்படுகிறது. மிகச்சிறந்த பிரிட்டிஷ் எழுத்தாளர்களில் மிக முக்கிய இடம் இவருக்கு உண்டு

* நமது யுகத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று எதுவும் இல்லை.
* ஒவ்வொரு தலைமுறையும் தனக்கு முந்தைய தலைமுறையை விடவும் மற்றும் தனக்கு பின் வரும் தலைமுறையை விடவும் தன்னை புத்திசாலித்தனமானதாக கற்பனை செய்துகொள்கிறது.
* ஏற்றுக்கொள்வதில் மட்டுமே மகிழ்ச்சி இருக்க முடியும்.
* நேர்மையற்ற தன்மையே ஒரு தெளிவான மொழியின் மிகப்பெரிய எதிரி ஆகும்.
* மக்கள் கேட்க விரும்பாததை மக்களுக்குச் சொல்லும் உரிமையே சுதந்திரம்.
* வாழ்க்கையின் பொருள் மகிழ்ச்சி என்று கருதிக்கொள்ளாதபோதுதான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
* ஒரு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான விரைவான வழி அதை இழப்பதாகும்.
* உற்பத்தி செய்யாமல் நுகரும் ஒரே உயிரினம் மனிதன்.
* சிந்தனை மொழியை சிதைத்தால், மொழியும் சிந்தனையை சிதைக்க முடியும்.
* வஞ்சகம் நிறைந்த காலத்தில் உண்மையைச் சொல்வது ஒரு புரட்சிகரமான செயல்.
* நீங்கள் ஒரு ரகசியத்தை வைத்திருக்க விரும்பினால், அதை உங்களிடமிருந்தும் மறைக்க வேண்டும்.
* யதார்த்தம் என்பது மனித மனதில் இருக்கிறது, வேறு எங்கும் இல்லை.
* அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் நோக்கத்துடன் யாரும் அதைக் கைப்பற்றுவதில்லை என்பதை நாம் அறிவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x