வறுமை: சில புள்ளிவிவரங்கள்!

வறுமை: சில புள்ளிவிவரங்கள்!
Updated on
1 min read

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீத அளவுக்கு உயரும் என்று பன்னாட்டு அமைப்புகள் கூறினாலும் இந்தியாவில் இன்னமும் 30 கோடி மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. மில்லீனியம் ஆண்டு மேம்பாட்டு திட்ட இலக்கின்படி இந்தியாவில் வறுமை ஒழிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையே சுட்டிக் காட்டியுள்ளது.

$ கல்வி, அடிப்படை சுகாதாரம், குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் எதுவுமே இவர்களுக்குக் கிடைக்கவில்லை.

$ 125 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்பது நெஞ்சு பதபதைக்க வைக்கும் செய்தியாகும்.

$ பாலின சமத்துவம், மகளிர்க்கு அதிகாரம், சிசு மரணக் குறைப்பு, திருமண வயதை அதிகரிப்பது, ஹெய்ஐவி மற்றும் எட்ய்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றுச் சூழல் மேம்பாடு ஆகிய இலக்குகளைக் கொண்டதாக இந்த செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

$ 2000-வது ஆண்டில் கொண்டு வரப்பட்ட மில்லீனியம் மேம்பாட்டு இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை மிகுந்த வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளது.

$ மக்களின் வறுமைக்கு 2 காரணங்கள் கூறப்படுகின்றன. புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களும், பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களும் வறுமையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

$ காடுகள், மலைகள், பனி படர்ந்த பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் வறுமையில் தவிப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

$ விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்கூட விவசாயத் தொழிலாளர்கள் வறுமையில் வாடுவதுதான் மிகவும் கொடுமையான விஷயம்.

$ நிலக்கரி சுரங்கங்களைச் சுற்றிய பகுதிகளில் வசிப்பவர்களில் அதிகமானோர் வறுமையில் வாடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

$ தரிசு நிலம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களில் வறுமை வாடுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

$ தகவல் தொடர்பு வசதியற்ற, போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகள் மற்றும் மாறுபட்ட தட்ப, வெப்ப நிலை நிலவும் பகுதிகளில் வசிப்பவர்களும் வறுமையின் பிடியிலிருந்து தப்பவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in