Published : 20 Apr 2015 10:24 AM
Last Updated : 20 Apr 2015 10:24 AM

கடன் சுமையில் தத்தளிக்கும் நிறுவனங்கள்!

தொழில்துறை வளர்ச்சிக்கு பல்வேறு ஊக்க நடவடிக் கைகளை அவ்வப்போது அரசு அளித்துக் கொண்டுதான் இருக்கிறது. அனைத்துத் துறைகளும் வளர்ச்சியடைந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பது அனைவருக்குமே தெரியும். என்ன காரணத்தாலோ விவசாய நாடான இந்தியாவில் விவசாயத்துக்கு இன்னமும் முன்னுரிமை கிடைக்காதது மிகப் பெரிய துரதிருஷ்டம்.

சரி அடுத்த கட்டமாக தொழில்துறையாவது வளர்ச்சியடைந்து வருகிறதா என்று பார்த்தால் அதுவும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் மூன்றில் ஒரு நிறுவனம் கடன் சுமையில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறுவனங்களின் அதிகரித்து வரும் கடன் சுமை நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை கேள்விக்குறி யாக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியமே (ஐஎம்எப்) எச்சரித்துள்ளது.

பெரும்பாலான நிறுவனங்கள் பங்குச் சந்தை மூலம் தங்களது விரிவாக்க நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதற்குப் பதிலாக வெளிச் சந்தையிலிருந்து கடன் பெற்றுள்ளன. வட்டி விகிதம் உயரும்போது அது நிறுவனத்தின் செயல்பாட்டை முடக்கிவிடும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார தேக்க நிலை நிலவும்போது வட்டி விகிதம் அதிகமாகவும், பொருள் தேவை குறையும், மக்களின் வாங்கும் சக்தி குறையும். இதனால் நிறுவனங்கள் கடனை திரும்பச் செலுத்த முடியாமல் போகும். 2013-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக இருந்தது. இது கடந்த நிதி ஆண்டில் 5.4 சதவீத அளவுக்கு உயர்ந்தது. இருந்தாலும் இந்தியாவில் உள்ள 3,500 நிறுவனங்களின் கடன் சுமை 40,000 கோடி டாலர் (சுமார் ரூ. 24,80,000 கோடி) இவற்றில் 34 சதவீத தொகை குறைவான வட்டிக்கு கடன் பெற்றதாகும்.

கடன் பெற்ற நிறுவனங்களில் பெரும்பாலானவை கட்டமைப்பு, மின்சாரம், சாலை மேம்பாடு, ஜவுளித் தொழில், ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி சார்ந்த தொழில் நிறுவனங்களாகும். இந்நிறுவனங்களின் கடன் சுமை யானது நாட்டின் ஏற்றுமதி மற்றும் வேலை வாய்ப்பையும் பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித் துள்ளனர். இந்தியாவில் நிறுவனங்கள் பெற்றுள்ள கடன் தொகை அவற்றின் சொத்து மீதான வருவாயில் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

நிறுவனங்களின் கடன் சுமை அந்த நிறுவனங்களை மட்டும் பாதிக்கவில்லை. அவற்றுக்கு கடன் வழங்கிய வங்கி களையும் நெருக்குதலுக்கு உள்ளாக்கும். வங்கிகளில் வாராக் கடனாக உயர்ந் துள்ள தொகையில் பெருமளவு நிறுவ னங்களுக்கு வழங்கிய கடன்தான் என்பதை சொல்லத் தேவையில்லை.

40 பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் 2 லட்சம் கோடிக்கு மேல். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 36 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கடன் சுமையானது மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் மிகவும் திறம்பட செயல்படும்போதுதான் வாராக் கடன் அளவைக் குறைக்க முடியும் என பிரைஸ்வார்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் கடன் சுமை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனில் (ஜிடிபி) 55.8 சதவீதமாக உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஆசிய பிராந்திய நாடுகளில் மிக அதிக அளவாகும்.

நிறுவனங்களின் கடன் சுமை நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதோடு அவற்றில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களையும் பாதிக்கும் விஷயமாகும். 36 நிறுவனங்களின் கடன் சுமை குறித்து ஆராய்ந்த போது அவற்றின் சந்தை மதிப்பை விட அவை பெற்றுள்ள கடன் அளவு 2 மடங்கு அதிகமாக உள்ளதாக அதிர வைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நிறுவனங்கள் தங்களின் சொத்துகளை விற்று கடன் சுமையை பெருமளவு குறைத்துள்ளன. இத்த கைய நிறுவனங்களின் செயல்பாடு தற்போது திருப்திகரமான நிலைக்குத் திரும்பியுள்ளததையும் மறுக்க முடியாது. நிறுவன கடன் சுமை பொருளாதாரத்தை பாதிப்பதோடு, முதலீட்டாளர்களையும் பாதிக்கும். இந்த விஷயத்தில் அரசு எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே முதலீட்டாளர்களைக் காக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x