

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), நிதி தொழில் நுட்பம் (பின்டெக்) போன்ற பிரபலமான முதலீட்டு கருப்பொருள்களுக்கு அப்பால்,
கிராமப்புற இந்தியா கவர்ச்சி கரமான நீண்ட கால முதலீட்டு கருப்பொருள்களில் ஒன்றாக இன்று மாறி வருகிறது. கிராமப்புற இந்தியாவை இனி நாம் வளர்ச்சியில் இருந்து ஒதுக்கிவைக்க முடியாது.
நுகர்வு, வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியின் மையமாக கிராமங்கள் உருமாறி வருகின்றன. உள்கட்டமைப்பு, சேவைகள் மேம்படும்போது அங்கு வருமானம் அதிகரிக்கும், செலவுகள் மேம்படும். அப்போது, அத்தியாவசிய பொருட்கள், நிதி, போக்குவரத்து, வீட்டுவசதி மற்றும் எரிசக்தி உள்ளிட்டவற்றின் வணிகம் மேம்படும்.