

கடந்த 2014-ம் ஆண்டு ‘உள்நாட்டில் தயாரிப்போம்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது, இந்தியாவை உலகின் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக இத்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் 80% குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக உள்ளன.
இதன்மூலம் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில் அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தில் உள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டின் புள்ளிவிவரப்படி ஜவுளித் துறை நாடு முழுவதும் 4.5 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. குறிப்பாக ஊரக பகுதிகளில் பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்குகிறது.