

நேரடியாக பங்கு சந்தையில் முதலீடு செய்வதா அல்லது பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதா, இதற்கெல்லாம் ஆலோசகரின் உதவி தேவையா? என முதலீட்டாளர்களுக்க பல்வேறு சந்தேகங்கள் ஏற்படும். இதுபற்றி பார்க்கலாம். உங்கள் முதலீட்டு முடிவுகளுக்காக சிறந்த தீர்மானம் எடுக்க சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பங்குச் சந்தை கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ள போதிலும், சில முன்னணி நிறுவனங்கள் சுமார் 0% வருவாயை மட்டுமே வழங்கியுள்ளன. சில நிறுவனங்கள் குறைவான வருவாயையும் சில நிறுவனங்கள் நஷ்டத்தையும் சந்தித்துள்ளன. 3 ஆண்டுகளில் 10% வருவாய் என்பது ஆண்டுக்கு சராசரியாக (சிஏஜிஆர்) சுமார் 3.23% என்பதை கவனத்தில் கொள்ளவும்.