

இந்தியா தனது ஒட்டுமொத்த தேவையில் 85% கச்சா எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்நிலையில், ரூபாய் மதிப்பு சரிவு, இஸ்ரேல், ஈரான் பிரச்சினை உள்ளிட்ட புவிசார் அரசியல் காரணங்களால் கச்சா எண்ணெய் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு விலை அதிகரித்தால் இந்திய பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
1 கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது இந்தியா அதிக டாலரை செலுத்த வேண்டி வரும். இதனால் டாலர் தேவை அதிகரித்து, ரூபாய் மதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும்.