

இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழுவின் 55-வது கூட்டம் மும்பையில் சமீபத்தில் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பணவீக்க நிலவரம், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் சில முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அது குறித்து பார்ப்போம்.
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன் வட்டியை (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா 0.25% குறைத்தது. இந்நிலையில் 3-வது முறையாக ரெபோ விகிதத்தை 0.5% குறைத்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 6.5% ஆக இருந்த ரெபோ விகிதம் 5.5% ஆக (1%) குறைந்துள்ளது.