

இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதியை எதிர்காலத்துக்காக பல்வேறு திட்டங்களில் சிறுக சிறுக சேமித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், சிலர் தங்களுடைய சேமிப்பு அல்லது முதலீட்டை மறந்தே விடுகின்றனர்.
சிலர் ஆவணங்களை தொலைத்து விடுகின்றனர். இன்னும் சிலர் தங்களுடைய சேமிப்பு குறித்து குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்காமல் இறந்து விடுகின்றனர். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி உரிமை கோரப்படாமல் உள்ளன.