

வருமான வரிச் சட்டத்தின்படி, இந்தியாவில் வசிக்கும் தனிநபர்கள் சம்பாதிக்கும் வருமானத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வரை வருமான வரி விலக்கு உள்ளது. அந்த வரி விலக்கு உச்சவரம்பைதாண்டுபவர்கள் வரி செலுத்த வேண்டும். அத்துடன் ஆண்டுதோறும் வருமான வரிப் படிவம் (ஐடிஆர்-1) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம்.
இந்நிலையில், வருமான வரி செலுத்துவதிலிருந்து முற்றிலும் விலக்கு பெற்ற மாநிலம் ஒன்று உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், சிக்கிம் மாநிலம்தான் இத்தகைய பெருமையைப் பெற்றுள்ளது. அங்கு எத்தனை கோடி சம்பாதித்தாலும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை.