ஏற்றுமதியை அதிகரிக்கும் இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் 

ஏற்றுமதியை அதிகரிக்கும் இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் 
Updated on
2 min read

இந்தியா, பிரிட்டன் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தாராள வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தாகி உள்ளது. மூன்று வருட ஸ்டாப்-ஸ்டார்ட் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவும் பிரிட்டனும் தாராளமய சந்தை அணுகலைப் பெறும். அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகக் கட்டுப்பாடுகள் பரஸ்பரம் தளர்த்தப்படும்.

இது ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய (பிரெக்ஸிட்) பிறகு பிரிட்டன் மேற்கொண்ட மிக முக்கியமான ஒப்பந்தமாகும். மேலும் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களுக்கு வெளியே இந்தியா மேற்கொண்டுள்ள முதல் ஒப்பந்தமாகும். தற்போது உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியாவும், 6-வது பெரிய பொருளாதாரமாக இருக்கும் பிரிட்டனும் (IMF உலகப் பொருளாதார கண்ணோட்டம் ஏப்ரல் 2025-ன்படி), இந்த இருதரப்பு வர்த்தக ஏற்பாட்டிலிருந்து கணிசமாக லாபம் ஈட்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in