Published : 05 May 2025 07:51 AM
Last Updated : 05 May 2025 07:51 AM
திருச்சி என்று சொன்னால் மலைக்கோட்டை, காவிரி ஆறு எப்படி நினைவுக்கு வருமோ அப்படி அந்த மாநகரின் மற்றொரு அடையாளம்தான் திருச்சி சாரதாஸ்..! இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான சாரதாஸ், கடந்த 1969-ல் மணவாளன் பிள்ளை என்பவரால் நிறுவப்பட்டது.
அரை நூற்றாண்டைக் கடந்தும் இன்றளவும் இளமையோடு நிலைத்திருப்பதற்கு அதன் ஆகச்சிறந்த வணிக நடைமுறையும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும்தான் அடிப்படை காரணம். சிறிய அளவில் தோற்றுவிக்கப்பட்டு இன்று தென்னிந்தியாவில் ஜவுளி விற்பனையில் தனி அடையாளமாக விளங்குவதற்கான அடித்தளத்தை அமைத்து கொடுத்தவர் அதன் நிறுவனரான காலஞ்சென்ற மணவாளன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT