

நமது அடுத்த தலைமுறைக்கு தேவையான செல்வத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் கனவு. அந்த வகையில், ஒரு வெற்றிகரமான முதலீட்டு பயணம் என்பது அதிக வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்ல. மாறாக அதில் எந்த அளவுக்கு மகிழ்ச்சியான மற்றும் மன அழுத்தம் இல்லாத அனுபவம் அடங்கியுள்ளது என்பதும் மிக முக்கியமானது.
அதிக வருமானத்தை மட்டும் ஈட்ட வேண்டும் என்று கவனம் செலுத்துவது பெரும்பாலும் சமரசமான முதலீட்டு செயல்முறைக்கே வழிவகுக்கும். எனவே முதலீட்டு பயணம் முழுவதும் சில அடிப்படையான கொள்கைகளை கடைபிடித்து நிலையான செல்வத்தை உருவாக்குகிறோமா என்பது ஒவ்வொருவரின் அவசியமான கேள்வியாகும்.