சர்வதேச பிராண்டுகளை தமிழகத்திலிருந்து உருவாக்க வேண்டும்: நிதின் அலெக்ஸாண்டர் நிறுவனர், அண்டர்டாக்ஸ் ஆப் மெட்ராஸ்

சர்வதேச பிராண்டுகளை தமிழகத்திலிருந்து உருவாக்க வேண்டும்: நிதின் அலெக்ஸாண்டர் நிறுவனர், அண்டர்டாக்ஸ் ஆப் மெட்ராஸ்
Updated on
4 min read

ஸ்டார்ட்அப் துறையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களை ஒன்றிணைத்து அத்துறையில் ஏற்கெனவே சாதித்த ஜாம்பவான்களின் அனுபவத்தையும், ஆலோசனைகளையும் அவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்ற நல்நோக்கோடு அண்டர்டாக்ஸ் ஆப் மெட்ராஸ், ஆண்டர்பர்னர் ஆப் மெட்ராஸ் போன்ற வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளை உருவாக்கியுள்ளார் நாகர்கோவிலைச் சேர்ந்த நிதின் அலெக்ஸாண்டர்.

பெண் தொழில்முனைவோருக்கான சிங்கப்பெண்ணே குழுவையும் இவர் நடத்தி வருகிறார். நிதினின் பெற்றோர் அரசு ஊழியர்கள். சென்னையில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்த இவர், வாழ்க்கையில் சாதிக்க துடிப்பவர்களை கைதூக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இவர் உருவாக்கிய வாட்ஸ்அப் குழுவில் இன்று 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவருடன் உரையாடியதிலிருந்து சில பதிவுகள்..

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in