

இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 6 மாதங்களாக தொடர் சரிவை சந்தித்து வந்தன. நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கை, டாலர் மதிப்பு உயர்வு, இஸ்ரேல்-பாலஸ்தீன போர், ரஷ்யா-உக்ரைன் பேர் உள்ளிட்டவை இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் காண தொடங்கியுள்ளன. குறிப்பாக, தொடர்ந்து பங்குகளை விற்று வந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், இப்போது வாங்கத் தொடங்கி உள்ளனர். இதனால் சரிவு முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மனதில் எழுகிறது. இதுபற்றி பார்ப்போம்.