

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்த ஒரு முக்கியமான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது. இது, சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் தொடர்புடையது.
அதுவே, ஒவ்வொரு இந்தியனின் கனவும் கூட. கனவு காண்பது மட்டும் போதாது, அதை உண்மையாக்க கடின உழைப்பு தேவை என்பதை தெளிவுபடுத்தி, குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், ‘உங்கள் கனவுகளை உயர்த்துங்கள், உழைத்திடுங்கள், வாழ்க்கையும் உயர்ந்திடும்' என இளைஞர்களிடம் அடிக்கடி அறிவுறுத்தினார்.