

ஓர் எளிய விவசாய-கிராமப் பின்னணியில் பிறந்து இன்று தனது உழைப்பால் ராம்ராஜ் காட்டன் எனும் பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார் கே.ஆர்.நாகராஜன். தனது தொழில் முனைவுக் கதையை இந்து தமிழ் திசை வாசகர்களுக்காக நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதிலிருந்து….
உங்கள் நதிமூலம், ரிஷிமூலம்? - எனது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள கைகாட்டி கிராமம். அப்பா எஸ்.ராமசாமி ஒரு விவசாயி, அண்மையில் காலமானார். அம்மா கருணாம்பாள் எங்களுடன் இருக்கிறார். அண்ணன் சிதம்பரநாதன் டிஇஓ ஆகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டார். என் இரு மகள்களுக்கும் மணமாகிவிட்டது. அவர்களும் மருமகன்களும் தொழிலில் என்னுடன் இணைந்துவிட்டனர்.