

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்ள், வாடிக்கையாளருக்கு தனி நபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் வழங்குவதற்கு ஒரு முக்கிய காரணியாக ‘சிபில்’ (Credit Information Bureau (India) Limited) மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.
சிபில் மதிப்பெண் 300 முதல் 900 வரை வழங்கப்படும். இதில் 750-க்கு மேல் இருந்தால் வாடிக்கையாளர் கேட்டபடி கடன் கிடைக்கும். 650 முதல் 749 வரை இருந்தால் கடன் கிடைக்கும். ஆனால் கூடுதல் வட்டி விதிக்க வாய்ப்பு உள்ளது. 550 முதல் 649 வரை இருந்தால் கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு.