நீண்​டகால வளர்ச்​சிக்கான முதலீட்டு திட்டம்

நீண்​டகால வளர்ச்​சிக்கான முதலீட்டு திட்டம்
Updated on
2 min read

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பங்குச் சந்தைகள் சராசரியாக (சிஏஜிஆர்) 11 சதவீத வளர்ச்சியை கொடுத்துள்ளன. ஆனால், தற்போதைய உலக சூழல் மிகவும் சிக்கல் நிறைந்ததாக காணப்படுகிறது. புவிசார் அரசியல் பதற்றம், உயர் மதிப்பீடு, அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம் மற்றும் மெதுவான வருவாய் வளர்ச்சி ஆகியவை பங்குச் சந்தையில் நிச்சமயற்ற தன்மையை அதிகரிக்க செய்துள்ளன.

இதனால், பல போர்ட்​போலியோக்கள் இப்போது அதிக வருவாய், அதிக ரிஸ்க் என்ற பாதையை நோக்கி சாய்ந்​துள்ளன. குறிப்​பாக, நடுத்தர மற்றும் சிறு நிறுவன பங்குகள் சமநிலையான ரிஸ்க் மேலாண்​மையி​லிருந்து தற்போது விலகிச் சென்​றுள்ளன. அதிக வருவாய் தரும் காலகட்​டங்கள் பெரும்​பாலும் முதலீட்​டாளர்​களிடையே தவறான பாது​காப்பு உணர்வை உருவாக்கி விடு​கின்றன. இதனால், தாங்கள் எதிர்​கொள்​ளும் சாத்​தி​யமான அபாயங்கள் குறித்து அவர்கள் கவனிக்​காமல் விட்டு​விடு​கின்​றனர்.

இதற்கு எடுத்​துக்​காட்டு, நிஃப்டி மிட்​கேப் 150 மற்றும் நிஃப்டி ஸ்மால்​கேப் 250 போன்ற மிட் மற்றும் ஸ்மால் கேப் குறி​யீடுகள் சமீபத்திய ஆண்டு​களில் 22 முதல் 29 சதவீத வளர்ச்​சியை பதிவு செய்​துள்ளன. அதேநேரம், இந்தப் பிரிவுகள் கடுமையான சரிவை சந்திக்​க​வும் வாய்ப்பு அதிகம். கடந்த 2020-ம் ஆண்டில் நிஃப்டி 50-ன் சரிவு 34 சதவீதமாக இருந்த நிலை​யில், நிஃப்டி ஸ்மால்​கேப் 250-ன் சரிவு 40 சதவீதமாக காணப்​பட்​டது. இது உயர் வளர்ச்சி துறை​களில் உள்ள ஏற்ற இறக்​கங்களை அடிக்​கோடிட்டு காட்டு​கிறது.

நிலை​யற்ற தன்மை அல்லது மாறு​பாடு என்பது பெரும்​பாலும் உண்மையான ஆபத்துகளை நம் கண்ணிலிருந்து மறைத்து​விடலாம். அதேபோல தீவிர சந்தை மாற்​றங்கள் முதலீட்​டாளர்​களின் நீண்​டகால இலக்​கு​களுக்கு இடையூறு விளைவிக்​கலாம். சந்தை ஓட்டம் கணிக்க முடி​யாதவை என்ப​தால், பல முதலீட்​டாளர்கள் ஸ்திரத்​தன்​மையை நாடு​கின்​றனர்.

அதனால்​தான் அவர்​களின் கவனம் நிஃப்டி 100, சென்​செக்ஸ் 30 குறிீடு​களின் பக்கமே நிற்​கிறது. யூரோ ஒன்றிய நெருக்​கடி, கோவிட் போன்ற பல்வேறு மோசமான நிகழ்வு​களின்​போது கூட அவை நிலைத்து நின்று ஆதாயத்தை பதிவு செய்தன. இந்த அணுகு​முறை முதலீட்​டாளர்கள் சந்தை நிலை​மைகளை பொருட்​படுத்​தாமல் அவர்​களின் நம்பிக்கையை பேணவும், இலக்​கு​களோடு இணைந்​திருப்​ப​தை​யும் சாத்​தி​ய​மாக்கு​கிறது.

குறைந்​த​பட்ச மாறு​பாடு மற்றும் ஸ்திரத்​தன்​மையை மையமாகக் கொண்ட உத்தி​யில், முதலீடு செய்வது நிலையான வளர்ச்​சிக்கு முன்னுரிமை அளிக்​கிறது. அதன்​படி, லார்ஜ் கேப் பங்கு​களில் கவனம் செலுத்து​வதன் மூலம் சந்தை ஏற்றத்​தாழ்வுகளை பற்றி கவலைப்​படாமல் முதலீட்​டாளர்கள் நிலையான வளர்ச்சி இலக்​குகளை அடைய முடி​யும்.

இப்படியான சுமுகமான முதலீட்டு பயணத்தை விரும்​பும் முதலீட்​டாளர்​களுக்கு, ஐசிஐசிஐ புருடென்​ஷியல் மியூச்​சுவல் சமீபத்​தில் புருடென்​ஷியல் ஈக்விட்டி மினிமம் வேரியன்ஸ் ஃபண்ட் திட்​டத்தை அறிமுகப்​படுத்​தி​யுள்​ளது. நவம்பர் 18-ம் தேதி அமலுக்கு வந்துள்ள இந்த திட்டம் 2024 டிசம்பர் 2 வரை நடைமுறை​யில் இருக்​கும்.

இந்த பண்ட் நல்ல நிர்​வாகம் மற்றும் வலுவான பணப்பு​ழக்​கத்தை கொண்ட லார்​ஜ்-கேப் நிறு​வனங்களை இலக்காக வைத்து செயல்​படுத்​தப்​படு​கிறது. எனவே, சந்தை ஏற்ற இறக்​கங்​களுக்கு இடையே நீண்​டகால வளர்ச்சி மற்றும் பின்னடைவுக்கு ஒரு சமநிலையான அணுகு​முறையை வழங்​கு​கிறது. மேலும், ஆழமான பகுப்​பாய்வை பயன்​படுத்தி ஏற்ற இறக்​கத்தை குறைக்​கும் வகை​யில் லார்​ஜ்-கேப் பங்​கு​களில் பன்​முகப்​படுத்​தப்​பட்ட போர்ட்ஃபோலியோவை இந்த ​திட்​டம்​ கட்​டமைக்​கிறது.

- இ.செல்​வநாயகம், இயக்​குநர், மெர்க்ஸ் கேபிடல் பிரைவேட் லிமிடெட்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in