Published : 15 Apr 2024 06:10 AM
Last Updated : 15 Apr 2024 06:10 AM

ப்ரீமியம்
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா புதிய நிதி ஆணையம்?

மத்திய அரசுக்கு தங்கள் மூலமாகவே அதிக அளவில் வரி கிடைக்கிறது. ஆனால், மத்திய அரசோ வரிப் பகிர்வில் தங்களுக்கு நியாயமான பங்கை வழங்குவதில்லை என்று தென் மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. நாட்டின் பொருளாதாரத்தில் தென் மாநிலங்களின் பங்களிப்பு 30 சதவீதமாகும். ஆனால் அம்மாநிலங்களுக்கு கிடைக்கும் வரி பகிர்வோ மிகவும் குறைவாகவே உள்ளது. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கடந்த பட்ஜெட்டில், வரிப் பகிர்வாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு ரூ.2.18 லட்சம் கோடி அறிவித்துள்ளது.

ஆனால், தென்னகத்தின் ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1.92 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 2000-05 முதல் 2021-26 காலகட்டத்துக்கு தென் மாநிலங்களுக்கான மத்திய அரசின் வரிப் பகிர்வு 21.1 சதவீதத்திலிருந்து 15.8 சதவீதமாகசரிந்துள்ளது. ஆனால் பிஹார், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 51.5% என்பதிலிருந்து 53.2% ஆக அதிகரித்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x