Published : 15 Jan 2024 06:03 AM
Last Updated : 15 Jan 2024 06:03 AM

ப்ரீமியம்
நாமும் பணக்காரர் ஆகலாம் - 14: பங்குச்சந்தை முதலீட்டின் பலன்கள்

இந்திய பங்குச்சந்தை 2023-ம் ஆண்டில் 20% வரை ஏற்றத்தைக் கண்டுள்ளது. நீண்டகால அடிப்படையில் வருடத்துக்கு சராசரியாக சுமார் 17.2% வருமானத்தை கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு, அதிக வட்டி, அதிக லாபம் என ஆசை வார்த்தைகளை கூறி வலை விரிக்கும் நிறுவனத்திடமும் தனி நபர்களிடமும் மக்கள் இன்னமும் பணத்தை பறிகொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையைமாற்றுவதற்கான முயற்சியில், எனக்கும் வாய்ப்பு கொடுத்த ‘இந்து தமிழ் திசை’நாளிதழுக்கு நன்றி. இனி பங்குச்சந்தையில் 2-ம் நிலை சந்தையில் நாமும் டீமேட் கணக்கு தொடங்கி, NSE, BSE ஸ்டாக் எக்ஸ்சேஞ் மூலம் பங்குகளை வாங்கி பணக்காரர் ஆகலாம். இதில் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

பங்குதாரர்களுக்கு பலன்: டிவிடெண்ட்: லாபத்தின் ஒரு பகுதிதான் டிவிடெண்ட். நாம் பங்குதாரராக இருக்கும் நிறுவனம், நல்ல லாபம் ஈட்டினால் அதில் ஒரு பகுதியை நம்முடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கும். பொதுவாக வருடத்துக்கு ஒருமுறை, நிதியாண்டின் முடிவில், பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக டிவிடெண்ட் அறிவிக்கப்படலாம். அதாவது ஒரு பங்குக்கு ₹1 அல்லது ₹2 அல்லது ₹5, ₹10 கூட அறிவிக்கலாம். எடுத்துக்காட்டாக ₹2/- அறிவித்திருந்தால், நாம் 100 பங்குகள் வைத்திருந்தால், நம் வங்கி கணக்கில் 100 X 2 = ₹200/- வரவு வைக்கப்படும். நிறுவனத்தின் லாபத்தை பொருத்து இந்த டிவிடெண்ட் தொகை கூடவோ அல்லது குறையவோ செய்யலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x