நண்டுகள் பேசினால்!

சிறிய நண்டு

சிறிய நண்டு

Updated on
3 min read

சின்ன நண்டு: அண்ணா, உங்களைப் பார்த்தா ரொம்ப பொறாமையா இருக்கு. நீங்க எவ்வளவு பெருசா, ஆரோக்கியமா இருக்கீங்க! ஆனா, நான் எவ்வளவு சின்னதா, நோஞ்சானா இருக்கேன். ஏன் அண்ணா இப்படி? நம்மைச் சுற்றியுள்ள இந்தப் பூமி ஏன் இப்படி விஷத்தன்மையுடன் இருக்கு?

பெரிய நண்டு: காலம் அப்படி மாறிப்போச்சுடா தம்பி. ஒரு காலத்துல நாம எல்லாம் வயல்வெளிகள்ல ராஜா மாதிரி வாழ்ந்தோம். நம்மைச் சுத்தி எவ்வளவு உணவு, எவ்வளவு பாதுகாப்பு! நம்ம கூட்டம் எங்கேயும் நிறைஞ்சிருக்கும். ஆனா, இப்போ... நம்ம கால்கள் மிதித்த மண்ணே நமக்கு நஞ்சாகிப் போச்சு.

சின்ன நண்டு: எங்க தாத்தா சொல்லுவார், ஒரு காலத்துல மழைக்காலம் வந்துட்டா, வயல் வரப்புகள்ல கூட்டம் கூட்டமா நண்டுகள் ஊர்ந்து போகுமாம். அப்போ கிராமத்து மக்கள், குறிப்பா ஏழை எளியவங்க, நம்மள அள்ளிட்டுப் போய் சமைச்சு சாப்பிடுவாங்களாம்.

அப்போ எல்லாம் நாமதான் அவங்களுக்கு ஆரோக்கியமான, சத்தான உணவு. வைட்டமின் பி12 நம்மகிட்ட நிறைஞ்சிருக்காம். நம்மளச் சாப்பிட்ட மனிதர்கள், ரத்தசோகை (Anemia) இல்லாமல் ஆரோக்கியமா வாழ்ந்தாங்களாம்.

இப்போ அந்த ஏழைகளுக்கு நம்மளைவிட மலிவான, சத்தான உணவு வேறு எங்கேயும் கிடைக்கலையாம். நம்மள சாப்பிட்ட நரி, பருந்து, காக்கைகளும்கூட நலமோடு வாழ்ந்துச்சாம்.

பெரிய நண்டு: நீ சொல்றது உண்மைதான்டா தம்பி. நாம வெறும் உணவு மட்டுமல்ல. விவசாயிக்கு நாம ஒரு வரம். வயல் வரப்புகள்ல இருக்கிற புழு பூச்சிகளைச் சாப்பிட்டு, பயிர்களைப் பாதுகாப்போம். நிலத்தை உழுது, மண்ணுக்குள்ள காற்றோட்டத்தை அதிகப்படுத்துவோம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in