

படங்கள்: செந்தில்குமரன்
இந்தியா, தெற்காசிய நாடுகளில் வாழும் ஆசிய யானைகள், இயற்கைச் சூழலின் ஆதார உயிரினங்களில் (Key stone Species) ஒன்றாகக் கருதப்படுகின்றன.
ஆனால் கடந்த சில தசாப்தங்களில் மனிதர்கள் மேற்கொண்டுவரும் அதிவேக வளர்ச்சி நடவடிக்கைகள் - சாலைகள், நகரங்கள், வேளாண் நிலங்கள், அணைகள், சுரங்கத் தொழில்கள் போன்றவை யானைகளின் இயற்கை வாழிடங்களைப் பெருமளவில் சுருக்கி, துண்டிக்கப்பட்ட (fragmented) நிலங்களாக மாற்றிவிட்டன.
முன்பு யானைகள் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பில் சுதந்திரமாகச் சஞ்சரித்தன. அவற்றின் வாழ்க்கை முறை தொலைதூர இடப்பெயர்ச்சியை (migration அடிப்படையாகக் கொண்டது.