

பூமியின் இயற்கையான காலநிலை மாற்றத்தை வெற்றிகரமாகப் பல முறை கடந்து வந்துவிட்ட ஆசிய யானைகள், இன்று மனிதரால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் மிக மோசமான விளைவுகளை எதிர்கொண்டு நிற்கின்றன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பருவமழையை அடிப்படையாகக் கொண்டு உருவான யானைகளின் வலசை வழித்தடங்கள், வாழ்க்கைச் சுழற்சி, சமூக அமைப்பு போன்றவை தற்போது கணிக்க முடியாத வெப்பஅலைகள், நெடிய வறட்சி, திடீர் மழை, வெள்ளத்தால் சீர்குலைந்து வருகின்றன.