எதிர்கொள்ளலைக் குறைக்கும் பயனுள்ள தீர்வுகள் | காடு என்ன சொல்கிறது? - 19

எதிர்கொள்ளலைக் குறைக்கும் பயனுள்ள தீர்வுகள் | காடு என்ன சொல்கிறது? - 19
Updated on
2 min read

அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் மனித–யானை எதிர்கொள்ளல் ஒரு பெரும் சவாலாக இருந்துவருகிறது. உணவு தேடிக் கிராமங்களுக்குள் நுழையும் யானைகள், விவசாயிகளின் பயிர்களைச் சேதப்படுத்துவதால் மக்களுக்குப் பொருளாதார இழப்பும் மனஅழுத்தமும் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினையை மட்டுப்படுத்தப் பல புதுமையான முயற்சிகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுவாக யானைகள் நெல், மக்காச்சோளம், வாழை போன்ற பயிர்களை விரும்பி உண்ணுகின்றன. இதனால் இப்பயிர்கள் அதிகம் விளையும் பகுதிகளில் யானைகளின் நுழைவு அதிகமாக உள்ளது.

இதற்கு மாற்றாக மஞ்சள், இஞ்சி, கடுகு போன்ற பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்தப் பயிர்களை யானைகள் பொதுவாகத் தவிர்ப்பதால், பயிர்ச் சேதம் குறைகிறது. அதேநேரத்தில், விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தையும் இவை வழங்குகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in