Last Updated : 18 Mar, 2023 06:03 AM

Published : 18 Mar 2023 06:03 AM
Last Updated : 18 Mar 2023 06:03 AM

ப்ரீமியம்
மாட்டுக்காரக் குருவி

முன்னொரு காலத்தில் அம்மாவும் நானும் ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுசென்றிருந்தோம். ஆடுகளெல்லாம் அங்குமிங்கும் ஓடின. அம்மா என்னை நிழலில் அமர வைத்துவிட்டு, அவற்றை விரட்டிக்கொண்டு இருந்தார். முதல் நாள் இரவு மழை பெய்திருந்த நிலையில், செடியெல்லாம் பச்சை நிற ஆடை உடுத்தி காற்றில் ஆனந்தமாய் ஆடியபடி இருந்தன. அன்றைக்கு நாங்கள் போன காட்டிற்கு மாடுகளும் மேய்ச்சலுக்கு வந்தன.

அங்கு மேய்ந்த மாடு களின் மேல் கறுப்பான சிறிய பறவை ஒன்று உட்கார்ந்தது. பிறகு கிளைடர் மாதிரி இறக்கை விரித்துப் பறந்து போய், பூமராங் மாதிரி திரும்பி அதே மாடு மேல் வந்து உட்கார்ந்துகொண்டிருந்தது. அந்தப் பறவை ரொம்ப நேரமாக இப்படியே பறந்துகொண்டு இருந்தது. நானும் அந்தப் பறவையின் செயல்பாடு புரியாமல், அதையே பார்த்துக்கொண்டு ஆடுகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். நல்லவேளை, அம்மா எல்லா ஆடுகளையும் கட்டுப்படுத்திவிட்டு, என்னைப் புன்முறுவலுடன் பார்த்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x