Published : 12 Nov 2022 06:27 AM
Last Updated : 12 Nov 2022 06:27 AM

ப்ரீமியம்
இயற்கையைக் காக்கத் தூண்டும் பறவைகள்

நீலத்தாழைக் கோழி

கண்ணன் சுப்ரமணியன்

நான் சிறு வயதில், பள்ளிப் பருவங்களில் வயல் வெளிகளில் கொக்குகள், நாரைகள், சில உள்நாட்டுப் பறவைகளையும் கண்டிருந்தாலும், பறவைகளையும் அவற்றின் குணாதிசயங்களையும் கண்டு ரசிக்க ஆரம்பித்தது சென்னை குரோம்பேட்டை, தாம்பரம் சதுப்புநிலங்களில்தான். பறவை களைப் படமெடுத்துக் கொண்டு மட்டும் இருந்தேன். பின்னர் மாணவர்களுக்குக் கற்பிப்பதற்காக அவற்றைப் பற்றிப் படிப்பதிலும், பறவை ஆர்வலர்களிடம் பேசுவதிலும் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டேன்.

தூண்டிய வீடு: திருநீர்மலை சாலையில் அமைந்துள்ள பெரிய ஏரியும் அதையொட்டிய சதுப்புநிலங் களும் உள்ளன. அங்குள்ள மெப்ஸ் (Madras Export Processing Zone- MEPZ), அதைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலிருந்து அந்த ஏரியில் கழிவு நீர் கலக்கிறது. குடிநீருக் காகப் பயன்படுத்தப்படாத அந்த ஏரியில் பல வகையான வலசைப் பறவைகளையும் உள்நாட்டுப் பறவைகளையும் காணலாம். அங்கு வரும் பறவைகளில் முக்கிய மானவை, நத்தைக்கொத்தி நாரை, நீலத்தாழைக் கோழி, கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க் காகம், வெள்ளை அரிவாள்மூக்கன் (Black Headed Ibis) அன்றில் எனப்படும் கறுப்பு அரிவாள்மூக்கன் (Black Ibis) போன்றவை. சதுப்பு நிலப் பகுதிகளுக்கு இடையில் கட்டப்பட்ட குடியிருப்பில் வசித்தது, இப்பறவைகளைக் கண்டு களிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் காரணமாக அமைந்தது. பறவை களை நோக்கும் இந்தப் பழக்கம், சூழலியல் பறவைகளின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது. உணவுச் சங்கிலியைக் கட்டமைத்து சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதில் பறவைகளின் பங்கை அறியவைத்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x