Last Updated : 07 May, 2022 08:02 AM

 

Published : 07 May 2022 08:02 AM
Last Updated : 07 May 2022 08:02 AM

ப்ரீமியம்
இயற்கை 24X7 04: புவிக்கு நாம் அவசியமா?

ஐரோப்பியர்கள் புதிய நிலப்பகுதி களைத் தேடி அலைந்த காலம். அவர்களின் கண்களில் படாமல் பசிபிக் பெருங்கடலின் நடுவே தனிமையில் அதுவரை ஒதுங்கியிருந்தது ஒரு தீவு. அதன் அப்போதைய பெயர் ‘ரப்பா நுய்’. அத்தீவுக்கு அருகிலுள்ள ஓரிடத்துக்குச் செல்ல வேண்டுமானால் 2300 கி.மீ. தொலைவில் உள்ள சிலி நாட்டுக்குத்தான் சென்றாக வேண்டும். அவ்வளவு தனிமை.

1722ஆம் ஆண்டில் டச்சுக் கப்பல் ஒன்று எப்படியோ அத்தீவுக்கு வந்துசேர்ந்தது. அந்தக் கப்பலிலிருந்தவர்கள், ஈஸ்டர் திருநாளன்று அத்தீவில் காலடி எடுத்து வைத்ததால் டச்சுக்காரர்கள் அதற்கு ‘ஈஸ்டர் தீவு’ என்று பெயரிட்டனர். அங்கே சென்றதும் அவர்கள் திகைத்தனர். காரணம் அங்கிருந்த மாபெரும் சிலைகள்தாம். ஏறக்குறையாக 900 சிலைகள் இருந்தன. ஒவ்வொன்றும் 40 அடி உயரமும் 14 டன் (1 டன் - ஆயிரம் கிலோ) எடையும் கொண்டவை. இவ்வளவு பெரிய சிலைகளை அத்தீவின் மக்கள் எப்படி வடித்திருப்பார்கள் என்று அன்றைக்கு டச்சுக்காரர்களுக்கு ஏற்பட்ட அதே வியப்புதான், இன்றைக்கும் சுற்றுலாப் பயணிகள் அங்கே குவியக் காரணமாக உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x