Published : 30 Apr 2022 08:31 AM
Last Updated : 30 Apr 2022 08:31 AM
இயற்கையைக் கணினியோடு நாம் ஒப்பிடலாம். அது கோடிக்கணக் கான உயிரின வகைமைகளின் தரவுகளைத் தனக்குள் சேமித்து வைத் துள்ளது. எது தேவையோ அதை மட்டுமே அவ்வப்போது திரையில் காட்டுகிறது. அதாவது, அந்த உயிரினங்களை மட்டும் உலகில் வாழ அனுமதிக்கிறது. மற்றவற்றை அழித்து விடுகிறது. இதையே டார்வினின், ‘இயற்கைத் தேர்வு’ம் விளக்குகிறது என்கிறார் உயிரியல் அறிஞர் ரிச்சர்ட் டாகின்ஸ்.
“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் உலகில் நடைபெறும் மிகச் சிறு மாற்றத்தையும் இயற்கைத் தேர்வு உற்றுக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அது கெட்டதைத் தள்ளி நல்லதைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கிறது. ஏதேனும் ஓர் உயிரினம் தொடர்ந்து பயனற்ற செயலில் ஈடுபட்டால் இயற்கைத் தேர்வு அதை ஒதுக்கிவிடும்” என்கிறார் அவர். உலகம் தொடங்கியதிலிருந்து வாழ்ந்துவந்த 99.9 சதவீத உயிரின வகைகளை அது அவ்வாறு புவியிலிருந்து நீக்கி வந்துள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்கிறார் பில் பிரைசன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT