

காட்டு உயிரினங்களுக்கு மனிதர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகள்:
1. காட்டுக்குள்ளும், காட்டுக்கு அருகேயும் கால்நடைகளை வளர்ப்பது, மேயவிடுவதால் காட்டு உயிரினங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுதல்.
2. கள்ளவேட்டை (சர்வதேச அளவில் பெருமளவு பணம் புழங்கும் வணிகம்).
3. சாலை, ரயில் போன்ற போக்குவரத்துத் தொந்தரவுகள், காட்டுக்குள் மின்கம்பிகளில் பாயும் மின்சாரம்.
4. நீரில் நச்சு, சாணம் போன்றவற்றைக் கலந்துவிடுதல்.
5. உணவில் விஷம் வைத்து உயிரினங்களைக் கொல்லுதல்.