இதய நோயாளிகளுக்கும் இதமான முயல் இறைச்சி

இதய நோயாளிகளுக்கும் இதமான முயல் இறைச்சி
Updated on
2 min read

முயல்​ வளர்ப்​பு தற்​போது தமிழக பண்​ணை​யாளர்​களிடையே நல்​ல வர​வேற்​பைப்​ பெற்​று வரு​கிறது. குறைந்​த முதலீடு மற்​றும்​
குறைந்​த இட​வச​தி இருப்​பவர்​களுக்​குக்​ கூட ​சாதக​மான தொழில்​ என்​ப​தே இதற்​குக்​ ​காரணம்​. ஒரு ​முயலுக்​கு இரண்​டு சதுர அடி இடம்​ இருந்​தால்​ ​போது​மானது. எனவே வீட்​டின்​ ​கொல்​லைப்​புறத்​திலோ, ​மாடி​யிலோ கூட, வீட்​டுப்​ பெண்​களால்​ ஒரு ​முயல்​ பண்​ணை​யைப்​ ப​ராமரிக்​க ​முடி​யும்​. ஆகவே, ​முயல்​ வளர்ப்​பு சிறந்​த பண்​ணைத்​ தொழிலாகக்​ கருதப்​படு​கிறது.

வீட்​டில்​ கிடைக்​கும்​ ​காய்​கறிக்​ கழி​வு​கள்​, பசும்​புற்​கள்​ ஆகிய​வற்​றை தீவன​மாக அளித்​து ​முயல்களை வளர்க்​கலாம்​. எனினும்​, இந்​த ​முறை​யில்​ வளர்ச்​சி வி​கிதம்​ குறை​வாக இருக்​கும்​. ஆகவே, கடைகளில்​ கிடைக்​கும்​ ​முயல்​களுக்​கான பிரத்​தி​யேகத்​ தீவனங்​களை அளித்​தால்​ நல்​ல வளர்ச்​சி கிடைக்​கும்​. மூன்​று ​மாத ​காலத்​துக்​குள்​ இரண்​டு கிலோ அளவுக்​கு வள​ரும்​. இரண்​டு கிலோ உடல்​ எடையை அடைந்​தவுடன்​ இறைச்​சிக்​காக ​விற்​கலாம்​. கோழிகள்​, பன்​றிகளுக்​கு அடுத்​த​படி​யாக ​முயல்​கள்​ அ​தி​க இன​விருத்​தி​திறன்​ ​கொண்​ட​வை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in