

நெய்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட எச்.சலீம் (54), தற்போது சென்னையில் வசித்து வருகிறார். எம்.எஸ்.சி. மண்ணியல் பயின்ற இவர், தன் துறை சார்ந்த பணிகளுக்காகக் கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 25 நாடுகளில் பணியாற்றியுள்ளார். இவர் 2018ஆம் செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அருகேயுள்ள காதிரப்பாக்கம் கிராமத்தில் மூன்றரை ஏக்கர் நிலம் வாங்கினார்.
கோவிட் பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு சென்னையிலேயே நிரந்தரமாக தங்கிவிட்ட இவர், இந்த இடத்தில் ஒருங்கிணைந்த பண்ணை ஏற்படுத்தியிருக்கிறார். கொய்யா, நெல்லி, மா, தென்னை உட்பட ஏராளமான மரப் பயிர்களை சாகுபடி செய்து, வருமானம் ஈட்டி வருகிறார். இந்தத் தோட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாட்டுக் கோழி பண்ணையொன்றைத் தொடங்கினார். அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து…