

சமீப காலமாக, தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் பண்ணை தொழில்களில் ஜப்பானியக் காடை வளர்ப்பானது, அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில், குறைந்த முதலீட்டில் காடை வளர்ப்பில் அதிக வருவாய் ஈட்ட முடிகிறது.
அதிக நோய் எதிர்ப்புத் தன்மை, ஒரு மாத கால வளர்ப்பிலேயே விற்பனை செய்யக்கூடிய அளவுக்கு வளர்ச்சி போன்ற காரணங்களால் காடை வளர்ப்பு, சிறந்த தொழில் வாய்ப்பாக உள்ளது. ஜப்பானியக் காடை என்பது சுமார் 200 முதல் 250 கிராம் எடை கொண்ட ஒரு சிறிய பறவையாகும். இக்காடை வளர்ப்பதற்கு மிக
அதிகமான இடம் தேவைப்படுவதில்லை.