பெருவீழ்ச்சிக் காலம் | கூடு திரும்புதல் 34

பெருவீழ்ச்சிக் காலம் | கூடு திரும்புதல் 34

Published on

1970களில் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளக் கடற்கரை ஊர்களில் மீன்பிடித் தொழில் பெரிதாக நிகழவில்லை. வள்ளம் போன்ற சின்ன படகுகளில் ஒரு சிறு வலை, தூண்டில் - இப்படி மிக எளிமையான அளவில்தான் தொழில் செய்யப்பட்டது. அப்போது கடலில் குறைவில்லாத மீன்வளம் இருந்தது. மீனைவிட இறாலுக்கு மதிப்பு அதிகம் என்பதால் கப்பல்களுக்கு இறால்தான் முதன்மை அறுவடை இலக்காக இருந்தது.

12 கடல் மைல் எல்லைக்குள்ளேயே கப்பல்களுக்குப் போதுமான மீன்வளம் இருந்தது. இழுவைமடிகள் 50 மீட்டர் ஆழ எல்லைக் குள்ளேயே இயக்கப்பட்டன. 1977 - 1987 காலக் கட்டம் முழுவதும் செழுமையான அறுவடைகளுடன் கப்பல்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in