

‘கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி' என்கிற ஔவையாரின் பாடல் வரியைக் கேள்விப் பட்டிருந்தாலும், கானமயில் என்கிற பறவையை அறிந்திருக்க மாட்டோம். கானமயில் (Great Indian Bustard) என்பது நமது மயிலைப் போன்ற பறவை அல்ல.
அது புல்வெளிகளில் மட்டுமே வாழக்கூடிய பறவை, இந்தியாவின் எடை மிகுந்த பறவை. அந்தப் பறவை தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன்னர்வரை இருந்தது. அதை திருச்சி சமயபுரம் பகுதியில் வேட்டையாடிப் பிடித்தது பதிவுசெய்யப்பட்டுள்ளது.