மறந்துவரும் பச்சை வாசனை | ஆயிரம் மலர்களே மலருங்கள் 1

மாங்காய்
மாங்காய்
Updated on
3 min read

பசுமை என்பது மகிழ்ச்சியின் வண்ணம். பச்சை வாசனை என்பது மகிழ்ச்சியின் நறுமணம். நாம் சமைத்தோ பச்சையாகவோ சாப்பிடும் எத்தனையோ கீரைகள், காய்கறிகள் ஆக்சிஜனேற்றிகளாகவும், மன அழுத்தம், பதற்றத்தைக் குறைப்பவையாகவும் இருக்கின்றன.

வேட்டையாடி-உணவு (கிழங்கு, காய், கனிகள்) சேகரித்து வாழ்ந்த காலத்திலிருந்தே நம் வாழ்வுடன் தாவரங்கள் இரண்டறக் கலந்துவிட்டன. இன்றைக்கும் பூர்வகுடிகளின் வாழ்க்கையிலிருந்து தாவரங்கள் பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. தாவரங்களை வழிபடும் அவர்கள், இயன்ற வழிகளில் எல்லாம் அவற்றைப் போற்றுகிறார்கள். கோயில் காடுகளையும், புனித மரங்களையும் கொண்டிருக்கிறார்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in