மீளுமா மீன்வளம்? | கூடு திரும்புதல் 30

மீளுமா மீன்வளம்? | கூடு திரும்புதல் 30
Updated on
3 min read

தெற்காசியாவிலேயே மிக நீளமான கடற்கரையைக் கொண்டது இந்தியா (8,100 கி.மீ.). இதன் முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பரப்பு 20 லட்சம் ச.கி.மீ. மாலத்தீவுகளின் முற்றுரிமைப் பொருளாதாரக் கடற்பரப்பு 8.6 லட்சம் ச.கி.மீ. மீன்வளமும் சுற்றுலாவும் மாலத்தீவின் முதன்மைப் பொருளாதாரக் கூறுகள்.

அந்நாட்டின் உற்பத்தியில் 6% மீன்வளத்திலிருந்து வருகிறது; மீன்வளம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 11% மக்களுக்கு வேலையளிக்கிறது; மாலத்தீவின் ஏற்றுமதியில் 99% மீன் உணவு. தீவு மக்கள் எல்லாரும் மீன் உண்பவர்கள். உலகிலேயே அதிக அளவு மீன் உண்பவர்கள் மாலத்தீவினர். சராசரியாக ஒருவர் ஆண்டுக்கு 144 கிலோ மீன் உண்கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in