சுற்றுச்சூழல் சிக்கல்களைப் பேசும் ‘புதுமலர்’

சுற்றுச்சூழல் சிக்கல்களைப் பேசும் ‘புதுமலர்’
Updated on
1 min read

ஈரோட்டிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவரும் ‘புதுமலர்’ காலாண்டிதழின் 2025 ஜனவரி பதிப்பு, சூழலியல் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. தமிழ்ச் சிற்றிதழ்கள் சுற்றுச்சூழல் சார்ந்த கூடுதல் கவனம் செலுத்துவதன் வெளிப்பாடு இது. பாமயன், கோவை சதாசிவம், சுப. உதயகுமாரன், பேராசிரியர் த. செயராமன், ஆதி, நிழல்வண்ணன், சரவணன், மு.வசந்தகுமார், 'பஞ்சுமிட்டாய்' பிரபு ஆகியோர் செறிவுமிக்கக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். புவியால் அனைவருடைய அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற முடியும்; ஆனால் ஒரே ஒருவரின் பேராசையைக்கூட அதனால் நிறைவேற்ற இயலாது.

சுற்றுச்சூழலைப் பேணுவதில் கார்ல் மார்க்ஸ் கொண்டிருந்த இக்கருத்து, இன்றைக்கும் பொருத்தமாக உள்ளதையும் உலகம் முழுவதும் உள்ள தொல்குடிகளின் வாழ்க்கைமுறைச் சிந்தனைகளோடு அது ஒத்துப்போவதையும் இக்கட்டுரைகள் பதிவுசெய்கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in